search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோல்டன் குளோப்"

    நடுக்கடலில் புயலில் சிக்கி காயமடைந்து ஆம்ஸ்டர்டாமில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி இன்று பத்திரமாக விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டார். #GoldenGlobeRace2018 #IndianSailorRescued
    கொச்சி:

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தபோது, புயல் காரணமாக அவரது படகை ராட்சத அலைகள் தாக்கியது.

    இதில், டோமியின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரால் மேற்கொண்டு படகை செலுத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் அவர் தகவல் அனுப்பினார்.

    அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிரான்ஸ் மீன்பிடி கப்பல் ஒன்றின் உதவியால், அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர் ஆம்ஸ்டர்டாம் தீவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு டோமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆம்ஸ்டர்டாமில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமாக சத்புரா போர் கப்பல் மூலம் டோமி பத்திரமாக விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வரப்பட்டார். இங்கு உள்ள கடற்படை மருத்துவமனையில் மேற்கொண்டு டோமிக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படும் என இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GoldenGlobeRace2018 #IndianSailorRescued 
    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்ற இந்திய கடற்படை வீரர் மோசமான வானிலையால் நடுக்கடலில் தத்தளித்து வருவதால் அவரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #GoldenGlobeRace2018
    கொச்சி :

    கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1–ந் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார்.

    ‘துரியா’ என்று பெயரிடப்பட்ட படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்த டோமி, திடீரென புயலில் சிக்கினார்.

    மோசமான வானிலையுடன் சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்து டோமியின் படகை அலைக்கழித்தன. இதில் படகில் சிக்கிக்கொண்ட அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் படகை விட்டு அவரால் நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் அவரால் படகையும் செலுத்த முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் நேற்று அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளன. #GoldenGlobeRace2018 
    ×